புதிய வானம் புதிய பூமி - எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என் இதயத்தைத் தொடுகிறது அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த அந்தக் காலம் தெரிகிறது அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற நம்பிக்கை தெரிகிறது அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது என்று ஆசை துடிக்கிறது
Original from: http://www.tamillyricsonline.com/2007/08/blog-post_1095.html
Copyright TamilLyricsOnline.com - All Rights Reserved